Search This Blog

Sunday, September 30, 2012

எனக்குப் பிடித்த கதை


"நாம் வெற்றி பெற"
இரு குட்டித் தவளைகள் ..குதித்து விளையாடிக்கொண்டிருந்தன...அவற்றிற்கு அருகே ..ஒரு ஆழம் அதிகமான பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.
தாவிக் குதித்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு தவளை...இது மிகவும் அவநம்பிக்கை கொண்டது. ஆதலால்..தப்பிக்க முயற்சி ஏதும் செய்யாது ..பாலிற்கு அடியில் போய் உயிரை விட்டது...
மற்ற குட்டித் தவளையோ நம்பிக்கை உள்ளது. பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்து உதைத்தது.நீச்சல் போட்டது...உந்தி..உந்தி கலக்கியது. பால் கலங்க ஆரம்பித்து அதில் ஆடை படர்ந்தது...மேலும்..மேலும் .. அதை தவளை உதைக்க..சிறிது..சிறிதாக வெண்ணைய் பந்து போல உருண்டு பாலில் மிதந்தது.
நம்பிக்கை கொண்ட தவளை வெண்ணைய் மீது சற்று அமர்ந்து இளைப்பாறி...பின் வெளியே தாவிப் பாய்ந்தது...
எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்காதவன் தோல்வியை சந்திக்கமாட்டான்...
நாம் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கையுடன் அக்காரியத்தில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்

Sunday, September 23, 2012

தீபாவளியே .....


தித்திக்கும் தீபாவளியே  தீ+ஆவளியே
தீங்கினை அழித்து தீபவரிசையுடன்
திகட்டாத பண்டங்களுடன்
தில்லைப் பெருமானின் திருமேருமலையில்
எரியும் மகரஜோதிபோல்
மக்களின் உள்ளங்களில் மன இருளை அகற்றி
மங்காப்புகழுடன் ஒளி விடும்
திருமகனின் தீப ஒளியான தீபாவளியே  - நீ
அகத்தினுள் ஒளிந்திருக்கும்
அகந்தையினை. ஒழிக்க வந்த தீப ஒளியே
ஆண்டாளின் மணாளனால் மண்னுலகைக் காத்து   
ஆனந்தக்களிப்பை அள்ளித்தந்த  தீப ஒளியே
இன்னல்களைக் களைந்து இனி ஒரு விதி செய்வோம்
இத்திருநாட்டில்  என்று  எழுந்த தீபஒளியே
ஈகைக்கு இலக்கணம் வகுக்கப் புறப்பட்ட
ஈடில்லா ஈசனின்  திருவடித் தீப ஒளியே
.உலகளந்தவனின் உத்வேகத்தால்  சூரனை அழித்து
உன்னத நிலையை உலகிற்கு வழங்கிய தீப ஒளியே
ஊராரும் உற்றாரும் மகிழும் வண்ணம்
ஊக்கத்தை உலகிற்கு அளித்த தீப ஒளியே
எண்ணிலடங்கா ஒளியுடன்
எம்பெருமான் உருவினில் வந்த தீப ஒளியே-
ஏகலைவன் அறிவினை ஏனையோரும் பெற
ஏழ்கடல் உலகினைத் தாண்டிவந்த தீப ஒளியே
ஐயரிக்கூட்டம் ஜய ஜய பேரிகை கொட்ட
ஐயன் என் கண்ணனாகப் பவனி வந்த தீப ஒளியே
ஒற்றுமையை வளர்க்க வந்த தீப ஒளியே
ஓம் காரனின் கரத்திலிருந்து வந்த தீப ஒளியே  -
உன்னை என்றும் போற்றுவோம் வணங்குவோம் தொழுவோம்

Translate