எனது
முதல் வடிவம் !!
அதுவும்
முத்தான வடிவம் !!
முயற்சியை
வெற்றியாக்கிய
வெற்றித்
திலகம் - மேலும்
எனக்குப்
பெருமை தேடித் தந்த
தரணியின்
மாணிக்கங்கள் …..
எந்த
ஒரு தாய்க்கும்
எத்தனை
செல்வங்கள் இருந்தாலும்
முதல்
செல்வத்தின் மேல் என்றும்
கரிசணை
அதிகமாகத்தான் இருக்கும்
அதைப்போல்
தான் எனக்கும்….. எத்தனை வகையான
மாணவர்களைப்
பார்த்தாலும் - இம்மாணவர்களிடம்
ஏனோ
என்னையறியாத தாகம், நேசம்……
தனயனாய்,
தோழனாய், நல் –
மாணாக்கராய்
என்றும் என்னுடன் இருந்து
என்னை
வழிநடத்தியவர்கள், வழிகாட்டியவர்கள்…….
இன்று,
வழிகாட்டியவர்களுக்கு வழியனுப்பு விழா !
விம்முகிறது
நெஞ்சம் , இருந்தும் விழைகிறது
விடைகொடுக்க…..
ஆம்
விண்
என்ற சொல்லை
எட்டுவதற்கும்,
முழு நிலா தோன்றும்
நாளைக்
காண்பதற்கும் முனைப்புடன் இருக்கிறேன்
எனது
முதல்வர்கள் என்றும்
எனதருமை
முதல்வர்களே என்பதை மீண்டும்
நிரூபித்துக்
காட்ட - இன்று
பற்றிய
கரத்தை விடுகிறேன் - மீண்டும்
இணைந்து
கரகோஷம் எழுப்ப J
No comments:
Post a Comment