Search This Blog

Monday, February 17, 2014

பிரிவு மடல்

எனது முதல் வடிவம் !!
அதுவும் முத்தான வடிவம் !!
முயற்சியை வெற்றியாக்கிய
வெற்றித் திலகம் - மேலும்
எனக்குப் பெருமை தேடித் தந்த
தரணியின் மாணிக்கங்கள் …..
எந்த ஒரு தாய்க்கும்
எத்தனை செல்வங்கள் இருந்தாலும்
முதல் செல்வத்தின் மேல் என்றும்
கரிசணை அதிகமாகத்தான் இருக்கும்
அதைப்போல் தான் எனக்கும்….. எத்தனை வகையான
மாணவர்களைப் பார்த்தாலும் - இம்மாணவர்களிடம்
ஏனோ என்னையறியாத தாகம், நேசம்……
தனயனாய், தோழனாய், நல் –
மாணாக்கராய் என்றும் என்னுடன் இருந்து
என்னை வழிநடத்தியவர்கள், வழிகாட்டியவர்கள்…….
இன்று, வழிகாட்டியவர்களுக்கு வழியனுப்பு விழா !
விம்முகிறது நெஞ்சம் , இருந்தும் விழைகிறது
விடைகொடுக்க….. ஆம்
விண் என்ற சொல்லை
எட்டுவதற்கும், முழு நிலா தோன்றும்
நாளைக் காண்பதற்கும் முனைப்புடன் இருக்கிறேன்
எனது முதல்வர்கள் என்றும்
எனதருமை முதல்வர்களே என்பதை மீண்டும்
நிரூபித்துக் காட்ட - இன்று
பற்றிய கரத்தை விடுகிறேன் - மீண்டும்

இணைந்து கரகோஷம் எழுப்ப J


No comments:

Post a Comment

Translate