Search This Blog

Sunday, August 17, 2014

குழந்தைப்பாடல்கள்

கடவுள் ஒருவனே
கடவுள் ஒருவனே – அவன்
கருத்தினில் நிலைப்பவன்
எங்கும் இருப்பவன் – அவன்
எண்ணியாங்கு முடிப்பவன்
நமக்கு அவன் தலைவனே
நாம் அவனைத் தொழ …..மறவோமே!!!!

பாலர் ஆத்திச்சூடி
அன்பைப் போற்று
ஆற்றலைப் பெருக்கு
இன்முகம் நாடு
ஈன்றோரை வணங்கு
உதவியை மேற்கொள்
ஊக்கத்தை விரும்பு
எண்ணியதை முடி
ஏற்றம் பெறு
ஐயை போல் வாழ்
ஒழுக்கத்தைக் கடைபிடி
ஓதலை ஓம்பு
ஔவை வழி நட

அ ஃதேவென கட

No comments:

Post a Comment

Translate