கல்வியமுதே!!!!
நீவிர், கரை
காணத் துடிக்கும் கடலலை;
கல்வியெனும் காலச்சுவட்டிலே
கடிகாரமாய் சுழல்பவள்;
முயற்சி என்னும் சொல்லுக்காக
மூச்சடக்கி முத்துக் குளிப்பவள்;
– என்
முதல்வராய் மட்டுமன்றி - முதன்மைக்
கல்வி அதிகாரியாகிய அலைமகள்;
பணியில் பைரவி;
பார்வையில் பார்வதி;
கனிவில் இமயம்;
கருணையில் கார்முகில்.
தயையே
!!
நீவிர், புகழ்ச்சியை விரும்பாதவள்;
புறம் பேசத் தெரியாதவள்;
கல்விக் கரையினில் -களைந்தெடுத்த
முத்தாய்ப் பிறந்தவள்.
அன்னையே
!!
உம்மை அள்ளி அரவணைத்தவரும் -
அருந்தவம் செய்தவரோ?
இல்லை!! அள்ளி முடிந்தவரும் -
அரும்பேறு பெற்றவரோ?
என்ற வினாவுக்கு
இருவிடை பகிர்தலன்றி ;
ஒருவிடையாய் உதித்தெழுந்த வித்தகியே
!!