Search This Blog

Saturday, March 15, 2014

வாழ்த்து மடல்


கல்வியமுதே!!!!
 நீவிர்,    கரை காணத் துடிக்கும் கடலலை;
                கல்வியெனும் காலச்சுவட்டிலே
                கடிகாரமாய் சுழல்பவள்;
                முயற்சி என்னும் சொல்லுக்காக
                மூச்சடக்கி முத்துக் குளிப்பவள்; – என்
                முத்துக்குமரனின் முழுமதியைப் பெற்றவள்;
                முதல்வராய் மட்டுமன்றி - முதன்மைக்
                கல்வி அதிகாரியாகிய அலைமகள்;
                பணியில் பைரவி;
                பார்வையில் பார்வதி;
                கனிவில் இமயம்;
                கருணையில் கார்முகில்.
தயையே !!
நீவிர்,     புகழ்ச்சியை விரும்பாதவள்;                                                                
                புறம் பேசத் தெரியாதவள்;
                கல்விக் கரையினில் -களைந்தெடுத்த
முத்தாய்ப் பிறந்தவள்.
அன்னையே !!
                உம்மை அள்ளி அரவணைத்தவரும் -
                அருந்தவம் செய்தவரோ?
                இல்லை!! அள்ளி முடிந்தவரும் -
                அரும்பேறு பெற்றவரோ?
                என்ற வினாவுக்கு
                இருவிடை பகிர்தலன்றி ;
                ஒருவிடையாய் உதித்தெழுந்த வித்தகியே !!

Translate